ரபேல் விமான விவகாரம்: காங்கிரஸ்? பா.ஜ.க?
யார்... என்ன செய்தார்கள்..?
- செந்தில் ஆறுமுகம்,13-11-2018
காங்கிரஸ்:
2007ல் ராணுவத்திற்கு 126 போர்விமானங்கள் வாங்க டெண்டர் கோரியது இந்திய அரசு. டெண்டரில் பங்கேற்ற 6 வெளிநாட்டு நிறுவனங்களில் குறைந்தவிலை கோரிய பிரான்ஸின் டசால்ட் நிறுவனம் வென்றது( ஜனவரி 2012ல். ஆம், இது நடப்பதற்குள் 5 ஆண்டு ஓடிவிட்டது). 18விமானங்கள் பறக்கும் நிலையில் டசால்ட் நிறுவனத்தால் கொடுக்கப்படும்; 108 விமானங்கள் இந்திய அரசின் HAL( Hindustan Aeronautics Limited) நிறுவனத்தால் தயாரிக்கப்படும் என்று ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டது. ஆனால், இது இறுதியாகவில்லை. அதற்குள் 2014 நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிட்டது. விமான கொள்முதல் தொங்கலில் விடப்பட்டது !! 2007ல் ஆரம்பித்த விமான கொள்முதல் விவகாரத்தை( 7 ஆண்டுகள் இழுத்தடித்த பின்னரும்) விரைவாக முடித்து, இந்திய ராணுவத்திற்கு மிகவும் தேவையான போர்விமானங்களைப் பெற்றுத்தராத காங்கிரஸ் ஒருபக்கம். ( அப்போதும் ரிலையன்ஸ்: ஜனவரி 2012ல் 126 விமானங்களைத் தயாரித்துக்கொடுக்க தேர்வுசெய்யப்பட்ட டசால்ட் நிறுவனத்துடன், பிப்ரவரி 2012ல் ரிலையன்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக்கொண்டது )
பா.ஜ.க:
(இந்தியாவின்) எதிரிகளின் போர் விமான பலம் கூடிவிட்டது. ( "...our adversaries inducted modern aircraft... They acquired better capability air-to-air-missiles.....They inducted 400 fighter aircraft...பக்கம்6: உச்சநீதிமன்றத்தில் ரபேல் விமான கொள்முதல் விவரம் குறித்து நேற்று மத்திய அரசு தாக்கல் செய்த ஆவணத்திலிருந்து) நம்முடைய போர்விமான பலம் குறைவாக உள்ளது. இப்போது “...critical operational necessity" உள்ளது என்று கூறி, பிரதமர் மோடி அவசர-அவசரமாக பிரான்ஸ் நாட்டோடு 10-04-2015 அன்று ஒப்பந்தம் போட்டார். ( ஒப்பந்தம் என்ன..? பறக்கத் தயாராக இருக்கும் 36 போர்விமானங்களை 67 மாதங்களுக்குள் தரவேண்டும் என்றும். இதில் முதல் விமானம் ஒப்பந்தம் இறுதியானதிலிருந்து 36 மாதத்தில் கிடைக்கும் என்றும் ஒப்பந்தம் முடிவானது). அதன்படி, 2019லிருந்து இந்தியாவிற்கு ரபேல் போர் விமானங்கள் கிடைக்கத் துவங்கிவிடும். பிரதமர் மோடி பிரான்ஸோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் போது, உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.. விலை நிர்ணயத்தில் முறைகேடு, இது பாதுகாப்புத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அதிகாரி போன்றவர்களுக்கே தெரியுமா என்பதே சந்தேகம் !! ரிலையன்ஸ்க்கு சாதகமாக செயல்பட்டார் !! ஊழல் நடந்துள்ளது என்பது குற்றச்சாட்டு. ( இப்போதும் ரிலையன்ஸ்: 2016 செப்டம்பரில் இந்தியா-பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் இறுதியாகிறது. 2016 அக்டோபரில் ரிலையன்ஸ்-டசால்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு கையெழுத்தாகிறது.)
இது பா.ஜ.க. பக்கம்.
புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமான, முழுமையான தகவல்-ஆவணங்கள் கிடைக்க வாய்ப்பில்லாத இந்த விவகாரத்தில் பா.ஜ.க - காங்கிரஸ் என யார் பக்கம் நியாயம் இருக்கிறது...?? உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்..!!
அடுத்த பதிவில் இன்னும் கூடுதல் விவரங்களோடு, விரிவாக எழுத முயற்சிக்கிறேன்..!!
-செந்தில் ஆறுமுகம்,
13-11-2018,
கருத்து பகிர: sentharu@gmail.com, 87545-80274
No comments:
Post a Comment